Sunday, March 30, 2008

நிதித் திட்டமிடுதல் - எடுத்துக்காட்டு-1b

கணக்கிடுதல். நமக்கு 20 வருடம் கழித்து 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. 10% அல்லது 15% அளவு வருமானம் தரும் வழியில் முதலீடு செய்யலாம். மாதா மாதம் எவ்வளவு பணம் போட வேண்டும்?

Recurring deposit என்னும் வகை சேமிப்பிற்கு , மாதாமாதம் இவ்வளவு பணம் போட்டால், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில், இவ்வளவு நாட்கள் கழித்து மொத்தம் வரும் பணம் எவ்வளவு என கணக்கிட சமன்பாடு இருக்கிறது. அதையே திருப்பிப் போட்டால், நம் கேள்விக்கு விடை கிடைக்கும்.

நாம் எதிர்பார்க்கும் தொகை (Total T) = 10 லட்சம்
நாட்கள் அல்லது காலம் (Number of Months, N) = 20 * 12 = 240 மாதங்கள்
வட்டி விகிதம் (interest, i) = 15% (ஆண்டுக்கு) = 15/12 % (மாதத்திற்கு)

மாதாமாதம் செய்ய வேண்டிய முதலீடு (Payment per month, P)


சமன்பாடு

P = (T * i) / { (1+i)^^N -1 }

நமது உதாரணத்தில் 20 வருடம் கழித்து, 15% வட்டி விகிதத்தில் 10 லட்சம் சம்பாதிக்க,
மாதாமாதம் நாம் போட வேண்டிய பணம் 668 ரூபாய் ஆகும்.

இங்கு நினைவில் கொள்ள வேண்டியது:

1. வைப்பு நிதியில் 7% எதிர்பார்க்கலாம்.
2. பங்கு சந்தையில், பல வருடங்கள் காத்திருக்க தயார் என்றால் 15% எதிர்பார்க்கலாம்.
3. நமக்கு நேரம் மிக நன்றாக இருந்தால் 20% கூட வரலாம். இல்லையென்றால் 10% ஆகக் குறையலாம்.
4. 30%, 40% என்று எதிர்பார்ப்பது பேராசை.


கீழே இருக்கும் அட்டவணையில், அவரது தேவையை பூர்த்தி செய்ய மாதம் எவ்வளவு பணம் சேமிக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டு உள்ளது.


இவர் வீடு வாங்குவது (அதாவது முழுப் பணத்தையும் கட்டி வீடு வாங்குவது நடக்காது. மற்ற குறிக்கோள்கள் நடக்க வாய்ப்பு உண்டு. மாதம் 4000 ரூபாய் என்ற அளவில் பங்கு சந்தையில் பரஸ்பர நிதி மூலம் முதலீடு செய்தால் (15% என்ற எதிர்பார்ப்பில்) தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஆனால் சேமிப்பை 2000லிருந்து 4000 ஆக்க வேண்டும்.

இப்போது இருக்கும் செலவில் வருமான வரி காட்டவில்லை. தவிர, ஆயுள் காப்பிற்கு காப்பு தொகை (ஆண்டுக்கு 2000 முதல் 3000 வரை இருக்கும்) சேர்க்க வேண்டும். இதெல்லாம் கணக்கில் எடுத்தால், இவர் மனைவியும் வேலைக்கு சென்றால்தான் முடியும். அப்போது கூட வீட்டை கடன் வாங்காமல் வாங்க முடியாது.

இவர் வீடு கடன் வாங்கினால், அதற்கு மாதம் கட்ட வேண்டிய பணத்தின் அளவை கணக்கிட்டு அதை மாத செலவுகளில் சேர்க்க வேண்டும். அது போக மீதம் சேமிக்கும் பணத்தில் தான் மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.

இவர் பரஸ்பர நிதியில் போடாமல், வைப்பு நிதியில் மட்டும் முதலீடு செய்தால் 7%தான் எதிர்பார்க்கலாம். அப்போது, 5 வருடம் அல்லது 10 வருடம் கழித்து 10 லட்சம் வேண்டும் என்றால், அவர் மாதம் செய்ய வேண்டிய முதலீட்டில் பெரிய வேறுபாடு இருக்காது. 7%க்கும் 15%க்கும் பெரிய வேறுபாடு ‘தெரியாது'.

ஆனால், 30 வருடம் கழித்து 20 லட்சம் வேண்டும் என்றால், 7% வருமானத்தில் மாதம் 1639 ரூபாய் கட்ட வேண்டும். 15% வருமானத்தில் மாதம் 289 ரூபாய் கட்ட வேண்டும். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் பெரியது.

10 அல்லது 20 வருடம் கழித்து 5000 ரூபாய் என்பது இப்பொழுது 500 ரூபாய் போல ஆகிவிடும். இப்பொழுதே யோசித்துப் பார்த்தால், 1988ல் 50 ரூபாய்க்கு இருந்த மதிப்பு இப்போது 500 ரூபாய்க்கு இருக்கிறது. இதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


சில வருடங்களுக்கு ஒரு முறை இவற்றை சரி பார்க்க வேண்டும். 20 வருடம் கழித்து திருமண செலவு 18 அல்லது 20 லட்சம் என இப்போது தோராயமாகத்தான் சொல்ல முடியும். அது நெருங்க நெருங்க , துல்லியமாக சொல்லலாம். அதனால் நடு நடுவே இவற்றை சரி செய்ய வேண்டும். ஆங்கிலத்தில் course correction என்று சொல்லுவார்கள். தமிழில், ‘போகும் பாதையை திருத்திக் கொள்ளுதல்' என்று சொல்லலாம்.

பலருக்கும் அவர்களது இலக்கு தெரியும். இந்தப்பாதையில் இவ்வளவு வேகத்தில் சென்றால் இவ்வளவு நாட்களில் இலக்கை அடையலாம் என்று திட்டமிட வேண்டும். நமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.

வருமானமும், நாம் போட்ட கணக்குப்படி எல்லாம் நடக்காது. அதையும் இப்படித்தான் தோராயமாக இப்பொழுது கணக்கிட்டு 2 அல்லது 3 வருடங்களுக்கு ஒருமுறை சரிபார்க்க வேண்டும். அதே சமயம் அடிக்கடி (மாதாமாதம்) சரிபார்க்க ஆரம்பித்தால், நிம்மதி இருக்காது.

3 comments:

வடுவூர் குமார் said...

எது நடக்குதோ இல்லையோ..
இது கட்டாயம் நடக்கும்.
நமது இலக்கும், சூழ்நிலைகளும் மாறினால், பாதையை மாற்ற வேண்டும்.

S. Ramanathan said...

நன்றி வடுவூர் குமார் அவர்களே.

Learn Speaking English said...

மிகவும் அருமை